Sunday, January 3, 2021
Thanjavur Seemaiyile Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/03/2021
Thanjavur Seemaiyile Song lyrics in Tamil
தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா
பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த பொன்னியம்மா
குடகு மலையை விட்டு கொங்கு நாட்ட தாண்டி வந்து
குடகு மலையை விட்டு கொங்கு நாட்ட தாண்டி வந்து
சோழ நாட்ட செழிக்க வச்சேன்டி அடி காவேரி நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி
அடி காவேரி நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி
தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா
பாண்டி நாட்டு சீமையிலே கண்ணு பாடி வந்தேன் வைகையம்மா
சங்கம் கண்ட மதுரையிலே நான் தமிழ வளர்த்த பாண்டியம்மா
மீனாட்சி அம்மன் வந்து மேனி குளிச்ச நதி
மீனாட்சி அம்மன் வந்து மேனி குளிச்ச நதி பொன்னான வைகை நதியடி
நான் உனக்கு முன்னே பொறந்தவதான் புரிஞ்சுக் கொள்ளடி
நான் உனக்கு முன்னே பொறந்தவதான் புரிஞ்சுக் கொள்ளடி
பாண்டி நாட்டு சீமையிலே கண்ணு பாடி வந்தேன் வைகையம்மா
நல்ல ஆடி மாதத்திலே நானே அம்மனாக காட்சி தந்தேன்
வண்ணக்கோலம் வரைஞ்சு வச்சு மக்கள் குலவைப் போட்டு வாழ்த்த வந்தேன்
வானம் மறந்த போதும் வற்றிடாமல் ஓடுகின்ற காவிரிக்கு நீ சமமா கண்ணே கண்ணே
சொல்லு கட்டழகி வைகை நதி பெண்ணே பெண்ணே
அடி வெள்ளம் பெருகி வந்தே மதுரை வீதியெல்லாம் பொங்கி வந்தேன்
அந்த கடவுள் வந்து மண் சுமந்து உடைஞ்ச கரை அடைச்ச பெருமை கொண்டேன்
தண்ணீர் பெருகி வந்தும் தாகமெல்லாம் தீர்த்து வந்தும்
பாவி மக்கள் பெருகியதால் மானே மானே
நீரோட்டம் தன்னை கொறச்சிக்கிட்டேன் நானே நானே
பனித் தூங்கும் மலை மேலே பிறந்து வந்தேன்டி
மணக்கோலம் சிவனோடு கலந்து வந்தேன்டி
பகீரத மன்னன் தவத்தினாலே தரையில் வந்தேன்டி
அடி பொன்னி அடி வைகை நீங்க எனக்கு நிகராடி
அடி பொன்னி அடி வைகை நீங்க எனக்கு நிகராடி
என்னை நாடி தினம் பாவம் போக்க வரும் பக்த ஜனங்கள் பல கோடி
இது உண்மை தானடி புனித நதியடி கங்கை நானடி
புனித நதி ஏழுக்குள்ளே டக்குமுக்குடிக்கு தாளம்
இந்த பொன்னியம்மா நானும் ஒருத்தி டக்குமுக்குடிக்கு மேளம்
தெரியாட்டா கேட்டுக்கோடி டக்குமுக்குடிக்கு தாளம் சும்மா
வெறியாட்டம் போடாதேடி டக்குமுக்குடிக்கு மேளம்
புனித நதி ஏழுக்குள்ளே டக்குமுக்குடிக்கு தாளம்
இந்த பொன்னியம்மா நானும் ஒருத்தி டக்குமுக்குடிக்கு மேளம்
கங்கையம்மா வைகையம்மா கழனி செழிக்கும் பொன்னியம்மா
உங்களுக்குள் சண்டை வந்தால் ஒருமைப்பாடு பிழைக்காது ஏலேலோ
உழவனுக்கு தெய்வமெல்லாம் உங்களைப் போல் நதிகளம்மா
உணவளிக்கும் தெய்வமெல்லாம் உழவராக வந்தோம் ஏலேலோ
மனிதர்களை நம்பி வந்தோம் நன்மை ஏதும் இல்லையம்மா
மண்ணை நம்பி பாடுபட்டோம் தீர்ந்து போச்சு தொல்லையம்மா
தீர்ந்து போச்சு தொல்லை ஏலேலோ
ஜனநாயகம் தழைத்திடணும் சமதர்மம் நிலைத்திடணும் சமதர்மம் நிலைத்திடணும்
பாட்டாளி சிரித்திடணும் பாரதமும் உயர்ந்திடணும்
பாரதமும் உயர்ந்திடணும் ஏலேலோ
பாரதமும் உயர்ந்திடணும் ஏலேலோ
பாரதமும் உயர்ந்திடணும் ஏலேலோ
Song Details |
|
---|---|
Movie Name | Ponnukku Thanga Manasu |
Director | Devaraj – Mohan |
Stars | Sivakumar, Vijayakumar, Jayachitra, Vidhubala, K.A. Thangavelu, M. R. R. Vasu, Manorama |
Singers | Seerkazhi Govindarajan, S. Janaki, B. Sasireka |
Lyricist | Muthulingam |
Musician | G.K. Venkatesh |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***