Sunday, May 10, 2020
Aayiram Ennam Kondu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/10/2020
Aayiram Ennam Kondu Song Lyrics in Tamil
TMS: தொந்திக் கணபதிக்கும் சுப்பிரமணியனுக்கும்
அந்த பரமனுக்கும் கோடி கோடி ஆ ஆ ஆ
PS: சக்தி உமையவட்கும் சாமுண்டி பைரவிக்கும்
பக்தியுடன் தொடுத்தேன் பாடி பாடி ஆ ஆ ஆ
TMS: ஆயிரம் எண்ணம் கொண்டு மானிட ஜாதி தன்னை
ஆண்டவன் படைத்தது அப்போ அப்போ
ஆயிரம் எண்ணம் கொண்டு மானிட ஜாதி தன்னை
ஆண்டவன் படைத்தது அப்போ அப்போ
PS: அதில் தாயுடன் வந்த எண்ணம் தான் கொண்ட சொந்த எண்ணம்
காலத்தில் மாறுவது இப்போ இப்போ
அதில் தாயுடன் வந்த எண்ணம் தான் கொண்ட சொந்த எண்ணம்
காலத்தில் மாறுவது இப்போ இப்போ
PS: புத்தியில் மூன்று வகை பூமியிலே இருக்கு
புத்தியிருந்தால் அதை சொல்லு சொல்லு
புத்தியில் மூன்று வகை பூமியிலே இருக்கு
புத்தியிருந்தால் அதை சொல்லு சொல்லு
TMS: கற்பூரம் கரித்துண்டு வாழைமட்டை
கற்பூரம் கரித்துண்டு வாழைமட்டை புத்தியென்று
நான் கணக்காகச் சொன்னேன் எண்ணிக் கொள்ளு கொள்ளு
நான் கணக்காகச் சொன்னேன் எண்ணிக் கொள்ளு கொள்ளு
TMS: பெண்ணே என்னே கற்பூர புத்தியிருக்கே
காட்டுனா அப்படியே புடிச்சுக்கும்
PS: ஹுக்கும்
TMS: கரித்துண்டு போட்டுப் போட்டு ஊதினாத்தான்
புடிக்கும் வாழைமட்டை என்ன ஊதினாலும் புடிக்காது தெரியுதா
PS: தெரியுது
PS: எடத்துக்குத் தக்கபடி எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்
குணத்துக்கு என்ன பெயர் சொல்லு சொல்லு சொல்லு
TMS: மரத்துக்குத் தக்கபடி நிறத்தையும் மாற்றிக் கொண்டு
வாழும் பச்சோந்தி என்று கொள்ளு கொள்ளு கொள்ளு
PS: கொலைகள் புரிந்தவனும் கொள்ளை அடிப்பவனும்
கொலைகள் புரிந்தவனும் கொள்ளை அடிப்பவனும்
கோவிலை கட்டுவது என்ன என்ன என்ன
TMS: பாவத்தின் சம்பளத்த சாமிக்கு தந்துவிட்டு
காசு பணத்தை மீண்டும் எண்ண எண்ண எண்ண
PS: ஏழையை வாட்டுகின்ற செல்வத் திமிங்கலத்தை
ஏழைகள் வெல்வதுண்டோ சொல்லு சொல்லு
ஏழைகள் வெல்வதுண்டோ சொல்லு சொல்லு
TMS: கோழையில் வீரனுண்டு கொள்கைத் துணிவிருந்தால்
யாருக்கும் வெற்றி என்றும் உண்டு உண்டு
TMS: ஆயிரம் எண்ணம் கொண்டு மானிட ஜாதி தன்னை
ஆண்டவன் படைத்தது அப்போ அப்போ
TMS: ஆயிரம் எண்ணம் கொண்டு மானிட ஜாதி தன்னை
ஆண்டவன் படைத்தது அப்போ அப்போ
PS: புத்தரை ஏசுவை போல் சத்தியவான்கள் இந்த
பூமியில் இன்று உண்டோ சொல்லு சொல்லு
TMS: உண்மையைச் சொன்னவர்க்கும் சொன்னதை செய்பவர்க்கும்
என்றைக்கும் அந்த பெயர் உண்டு உண்டு
நூறு வயசு வரை வாழ நினைப்பவர்க்கு
யோசனை வைத்திருந்தால் சொல்லு சொல்லு
நீ சொல்லு சொல்லு
PS: சாமி தருமன் என்று ஊரே புகழ்ந்துரைத்தால்
சாமி தருமன் என்று ஊரே புகழ்ந்துரைத்தால்
நூறு வயசுக்கு மேல் உண்டு உண்டு
ஒரு நூறு வயசுக்கு மேல் உண்டு உண்டு
PS: காக்காயின் புத்தி அதன் மூக்கிலே உண்டு
TMS: கெட்ட கழுதையின் புத்தி அதன் காலிலே உண்டு
PS: குள்ள நரி புத்தி அதன் குணத்தில் உண்டு
TMS: சிலர் குரங்குத் திருட்டுப் புத்தி பணத்தில் உண்டு
PS: குரைக்கின்ற நாயின் நன்றி வாலில் உண்டு
TMS: நல்ல குதிரையின் நன்றி அதன் முதுகில் உண்டு
PS: பசு தரும் நன்றி அதன் பாலில் உண்டு
TMS: இங்கு பாடுபடும் ஏழை நன்றி உழைப்பில் உண்டு
Both: எங்கள் உழைப்பில் உண்டு எங்கள் உழைப்பில் உண்டு
Song Details |
|
---|---|
Movie | En Annan |
Stars | M. G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, Vijaya Nirmala, Cho |
Singers | T. M. Soundararajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1970 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***