Sunday, May 10, 2020

Aayiram Ennam Kondu Song Lyrics in Tamil

Aayiram Ennam Kondu Song Lyrics in Tamil

TMS: தொந்திக் கணபதிக்கும் சுப்பிரமணியனுக்கும்
அந்த பரமனுக்கும் கோடி கோடி ஆ ஆ ஆ
PS: சக்தி உமையவட்கும் சாமுண்டி பைரவிக்கும்
பக்தியுடன் தொடுத்தேன் பாடி பாடி ஆ ஆ ஆ

TMS: ஆயிரம் எண்ணம் கொண்டு மானிட ஜாதி தன்னை
ஆண்டவன் படைத்தது அப்போ அப்போ
ஆயிரம் எண்ணம் கொண்டு மானிட ஜாதி தன்னை
ஆண்டவன் படைத்தது அப்போ அப்போ
PS: அதில் தாயுடன் வந்த எண்ணம் தான் கொண்ட சொந்த எண்ணம் 
காலத்தில் மாறுவது  இப்போ இப்போ
அதில் தாயுடன் வந்த எண்ணம் தான் கொண்ட சொந்த எண்ணம் 
காலத்தில் மாறுவது  இப்போ இப்போ

PS: புத்தியில் மூன்று வகை பூமியிலே இருக்கு
புத்தியிருந்தால் அதை சொல்லு சொல்லு
புத்தியில் மூன்று வகை பூமியிலே இருக்கு
புத்தியிருந்தால் அதை சொல்லு சொல்லு
TMS: கற்பூரம் கரித்துண்டு வாழைமட்டை
கற்பூரம் கரித்துண்டு வாழைமட்டை புத்தியென்று
நான் கணக்காகச் சொன்னேன் எண்ணிக் கொள்ளு கொள்ளு
நான் கணக்காகச் சொன்னேன் எண்ணிக் கொள்ளு கொள்ளு

TMS: பெண்ணே என்னே கற்பூர புத்தியிருக்கே 
காட்டுனா அப்படியே புடிச்சுக்கும்
PS: ஹுக்கும்
TMS: கரித்துண்டு போட்டுப் போட்டு ஊதினாத்தான்
புடிக்கும் வாழைமட்டை என்ன ஊதினாலும் புடிக்காது தெரியுதா
PS: தெரியுது

PS: எடத்துக்குத் தக்கபடி எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்
குணத்துக்கு என்ன பெயர் சொல்லு சொல்லு சொல்லு
TMS: மரத்துக்குத் தக்கபடி நிறத்தையும் மாற்றிக் கொண்டு
வாழும் பச்சோந்தி என்று கொள்ளு கொள்ளு கொள்ளு
PS: கொலைகள் புரிந்தவனும் கொள்ளை அடிப்பவனும்
கொலைகள் புரிந்தவனும் கொள்ளை அடிப்பவனும்
கோவிலை கட்டுவது என்ன என்ன என்ன
TMS: பாவத்தின் சம்பளத்த சாமிக்கு தந்துவிட்டு
காசு பணத்தை மீண்டும் எண்ண எண்ண எண்ண

PS: ஏழையை வாட்டுகின்ற செல்வத் திமிங்கலத்தை
ஏழைகள் வெல்வதுண்டோ சொல்லு சொல்லு
ஏழைகள் வெல்வதுண்டோ சொல்லு சொல்லு
TMS: கோழையில் வீரனுண்டு கொள்கைத் துணிவிருந்தால்
யாருக்கும் வெற்றி என்றும் உண்டு உண்டு
TMS: ஆயிரம் எண்ணம் கொண்டு மானிட ஜாதி தன்னை
ஆண்டவன் படைத்தது அப்போ அப்போ
TMS: ஆயிரம் எண்ணம் கொண்டு மானிட ஜாதி தன்னை
ஆண்டவன் படைத்தது அப்போ அப்போ

PS: புத்தரை ஏசுவை போல் சத்தியவான்கள் இந்த
பூமியில் இன்று உண்டோ சொல்லு சொல்லு
TMS: உண்மையைச் சொன்னவர்க்கும் சொன்னதை செய்பவர்க்கும்
என்றைக்கும் அந்த பெயர் உண்டு உண்டு
நூறு வயசு வரை வாழ நினைப்பவர்க்கு
யோசனை வைத்திருந்தால் சொல்லு சொல்லு
நீ சொல்லு சொல்லு
PS: சாமி தருமன் என்று ஊரே புகழ்ந்துரைத்தால்
சாமி தருமன் என்று ஊரே புகழ்ந்துரைத்தால்
நூறு வயசுக்கு மேல் உண்டு உண்டு
ஒரு நூறு வயசுக்கு மேல் உண்டு உண்டு

PS: காக்காயின் புத்தி அதன் மூக்கிலே உண்டு
TMS: கெட்ட கழுதையின் புத்தி அதன் காலிலே உண்டு
PS: குள்ள நரி புத்தி அதன் குணத்தில் உண்டு
TMS: சிலர் குரங்குத் திருட்டுப் புத்தி பணத்தில் உண்டு
PS: குரைக்கின்ற நாயின் நன்றி  வாலில் உண்டு
TMS: நல்ல குதிரையின் நன்றி அதன் முதுகில் உண்டு
PS: பசு தரும் நன்றி அதன் பாலில் உண்டு
TMS: இங்கு பாடுபடும் ஏழை நன்றி உழைப்பில் உண்டு
Both: எங்கள் உழைப்பில் உண்டு எங்கள் உழைப்பில் உண்டு

Song Details

Movie En Annan
Stars M. G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, Vijaya Nirmala, Cho
Singers T. M. Soundararajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***