Wednesday, May 29, 2019

Endrum Puthiyathu Song Lyrics in Tamil

Endrum Puthiyathu Song Lyrics in Tamil

அரியது கேட்கும் வடிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு 
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

கூன் குருடு செவிடு பேடு 
நீங்கிப் பிறந்த காளையும் 
ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும் கல்வியும் நயந்த காளையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி பிறந்திடுமே

அரியது கேட்டமைக்கு அழகான தமிழில் விளக்கம் தந்த மூதாட்டியே 
கொடியது என்ன?

கொடியது கேட்கின் வடிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை

அதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையால் 
இன்புற உண்பது தானே

மிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால் வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்
திறமை படைத்த ஔவையே 
பெரியது என்ன?

பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமும் நான் முகன் படைப்பு
நான் முகன் கரிய மான் முந்தியில் வந்தோன்

கரிய மானோ அலைகளுக்குயன்றோன்
அலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம்

குருமுனியோ கலசதுப் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுவன் 

புவியோ அறவினிக் ஒரு தலைப் பாரம்
அறமோ உமையவள் சிறு விரல் மோதிரம்

உமையோ இறைவர் பாகத் ஒடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத் ஒடுக்கம்

தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே

ஔவையே வானவரும் உனது வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் 
அதில் வியப்பில்லை
இனியது என்ன?

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியை தொழுதல்
அதனினும் இனிது அறிதினள் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பது தானே

அரியது கொடியது பெரியது இனியது அனைத்திற்கும் முறையோடு 
விடை பகன்ற ஔவையே 

புதியது என்ன?

என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 
பாடல் என்றும் புதியது
முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 
பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது

முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது

உனது தந்தை இறைவனுக்கும் வேலும் மயிலும்
உனது தந்தை இறைவனுக்கும் வேலும் மயிலும் புதியது

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது

சேர்ந்தவர்க்கு வழங்கும் 
கந்தன் கருணை புதியது

அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண 
உனது தமிழ் இனியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண 
உனது தமிழ் இனியது

முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது

Song Details

Movie Kandankarunai
Singer K.B.Sundarambal
Lyrics Kannadasan
Musician K.V.Mahadevan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***