Wednesday, January 9, 2019

Aathula Thanni Vara Song Lyrics in Tamil

Aathula Thanni Vara Vannakili Movie Song Lyrics in Tamil

ஆத்துல தண்ணிவர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்
ஆத்துல தண்ணிவர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன் - கண்ணம்மா
கண்ணம்மா அதைப்பாத்து அவன் ஏங்குவதுதேன் சொல்லம்மா

பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன்
பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே
புத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன் கண்ணம்மா
கண்ணம்மா கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா
கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா

பஞ்செடுத்து பதப்படுத்தி பக்குமா நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா - இங்கு
பஞ்செடுத்து பதப்படுத்தி பக்குமா நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா - இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆஆஆ
காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன்

காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன் - கண்ணம்மா
கண்ணம்மா நேத்திரத்தை பறிப்பதும் ஏன் சொல்லம்மா

ஏற்ற தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
ஏற்ற தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா - இதை
எல்லோா்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோா்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆத்துல தண்ணிவர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன் - கண்ணம்மா
கண்ணம்மா அதைப்பாத்து அவன் ஏங்குவதுதேன் சொல்லம்மா

கண்ணம்மா சொல்லம்மா கண்ணம்மா சொல்லம்மா கண்ணம்மா வா வா கண்ணம்மா

Movie Year Singer Music Lyricist
Vannakili 1959 Seerkali Govindarajan K.V.Mahadevan A.Maruthakasi

2 comments :

  1. கே.வி.மகாதேவன் ஒரு மிக சிறந்த இசையமைப்பாளர்.இவரின் அனைத்து பாடல்களுமே எப்போதும் அருமை.

    ReplyDelete
  2. இது போன்ற பாடல் வரிகளை அதிகம் எழுதுங்கள்

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***