Tuesday, May 5, 2020

Rajathi Rajamaha Sivaji Song lyrics in Tamil

Raja Raja Maha Raja Veeraprathaaban Song lyrics in Tamil

வந்தேனே வந்தேனே வந்தேனே வந்தேனே
ஆமா
ராஜாதி ராஜ மகா ராஜா தீர பிரதாப
ராஜாதி ராஜ மகா ராஜா தீர பிரதாப
ராஜாதி ராஜன் வந்தேனே வந்ததேன் அய்யா
வந்தனம் தந்தேன் அய்யா
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேன் அய்யா
அய்யா வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேன் அய்யா
தச்ஜோம் தகதோம் தகதிபி தித்தோம் திகிதோம் திகிதக
தத்தலாங்கு தக திகுஜக திகுஜக திடுதக திடுதக
தகஜீனு தகஜீனு தத்தித்தகஜீனு ஜா தகதித்தகஜீனு ஜா
தளாங்குதகஜீனு ஜா ஆ

தங்க சருக சேலை எங்கும் பளபளக்க வந்தேனே
ஏ வந்தேனே ஏ வந்தேனே
தங்க சருக சேலை எங்கும் பளபளக்க
தங்க சருக சேலை எங்கும் பளபளக்க
தனியாள வந்தேனய்யா வந்தேனய்யா வந்தனம் தந்தேனய்யா
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனய்யா
சாமி வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனய்யா
தங்க சருக சேலை எங்கும் பளபளக்க
தங்க சருக சேலை எங்கும் பளபளக்க
தங்க சருக சேலை எங்கும் பளபளக்க
தங்க சருக சேலை எங்கும் பளபளக்க
தச்ஜோம் தகதோம் தகதிபி தித்தோம் திகிதோம் திகிதக
தத்தலாங்கு தக திகுஜக திகுஜக திடுதக திடுதக ஜீனுதக ஜீனுதக
தத்தித்தகஜீனு ஜா தகதித்தகஜீனு ஜா
தளாங்குதகஜீனு ஜா ஆ

அன்பர் தொழும் மாறனோ னோ தண்டுளப வண்ணலோ னோ
அன்புரதி என்றுமகிழ் இன்பமதனோ ஒமதனோ
இளம் பருவத்தால் நல்ல உருவத்தால் நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான்
இளம் பருவத்தால் நல்ல உருவத்தால் நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான்
இவனை கண்டவுடன் எந்தன் உள்ளம் மகிழுதே பருவத்தால் ஆ

நாம் இங்கு நின்று இந்த யுகம் முழுதையும் வா்ணித்தாலும் இவர் அங்கத்தில் ஒரு பாகத்தை கூட வர்ணிக்க முடியாது போலிருக்கிறது நல்லது அருகில் சென்று உறக்கத்திலிருந்து நீக்குவோம்

ஆஹா நான் காண்பது என்ன கனவா அல்லது நனவா
எனது கண்ணெதிரே நிற்பது மண்ணுலக மங்கையா அல்லது விண்ணுலக நங்கையா என்னழகு என்னழகு
இவளது இடையழகும் நடையழகும் உடையழகும்
இவளது கண்ணழகும் கட்டழகும் பொட்டழகும்
எனது நெஞ்சை விட்டகல நிற்கிறதே
இவள் யாராக இருக்கக்கூடும்

ஊர்வசியும் இவள் தானோ ரம்பை தானோ ரதி தானோ
பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
ஊர்வசியும் இவள் தானோ ரம்பை தானோ ரதி தானோ
பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
அய்யா பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
இவள் ஊர் தான் எது பேர் தான் எது யார் தான் அறிவார் தானது
உன்னதமாகவே வந்தாள் வந்து நின்றாள் நெஞ்சில் உவகை பெற காட்சி தந்தாள்

ஆக ஆயிரம் நாவை படைத்த அந்த ஆதிசேஷனாலும் இவளுடைய அழகை வர்ணிக்க முடியாதென்றால் கேவலம் ஏகநாவை படைத்த நம்மாள் எப்படி முடியும் அருகிகேலே சென்று யாரென்று விசாாிப்போம்.

நாவின்மணியே சுவாமி
அதாகப்பட்டது தென்றல் வீசும் இந்த ஒய்யார வனத்திலே
என்னை மறந்து நான் உறங்கி கொண்டிருக்கும் காலையிலே
அதாகப்பட்டது அச்சம் மடம் நானம் பயிர்ப்பு என்று சொல்லக்கூடிய அந்த நான்கு விதமான பெண்களுக்குாிய குணங்களை விட்டு  நீ என் அருகே வந்து நின்று என்னை தொட்டு

ஏனோ எனை எழுப்பலனாய் மடமனேன் மடமனேன்
எனக்கதனை உரைக்க வேனும் இசைந்து கேட்பேன் நானே எ நானே
சிங்கத்தால் சிங்கத்தால்
சிங்கத்தால் நான் அடைந்த துன்பம் தீர்த்தாலே
செய்த நன்றி எண்ணி வந்தேன் தோ்ந்த அன்பினாலே
எந்த ஊரோ இருப்பது பொியார் தந்தை
இன்றெனக்கு நீ உரைத்தாய் இன்பம் கொள்ளும் சிந்தை

அழகிய மதுராபுாி அஷ்வபதி பூத்திாி பூத்திாி
அக்கம் பக்கம் தோா்கள் எனை அழைக்கும் பெயா் சாவித்திாி சாவித்திாி
இன்னும் மனம் ஆனதோ ஒஹோ
இன்னும் மனம் ஆனதோ இல்லையோ சொல்லு
இச்சை கொண்டேன் கேட்பதற்கு லஜ்ஜையும் ஆகாது
சொல்ல வெக்கம் ஆகுதே ஒஹோ
சொல்ல வெக்கம் ஆகுதே இன்னும் மனம் இல்லை
சொந்தமான தந்தை தயாா் என்னிடமும் இல்லை இல்லை

அதாகப்பட்டது பிரபு பெண்பாய்
என் திருமணத்தை பற்றி என் தாய் தந்தையா் நினைக்கவும் இல்லை
நானும் நேற்றுவரை அதை பற்றி சிந்திக்கவும் இல்லை
இன்றென்னவோ
அதை நான் சொல்லி தொிய  வேண்டுமா சுவாமி

ரூப சித்திர மாமரக் குயிலே உனக்கொரு வாசகதினை நான் உரைத்திட
நாடி நிக்கிறதால் அன்பினால் இன்பமாய் இங்குவா
அட்டி ஏது இதோ கிட்டி வாரேன்
சித்தமானேன் சமீபத்தில் நீ வா

மன்னா என் ஆசை மறந்திடாதீா்
உன்னாசை நானோ மறப்பதில்லை
அய்யோ மன்னா என் ஆசை மறந்திடாதீா்
சகி உன்னாசை நானோ மறப்பதில்லை
மறந்திடாதீா் மறப்பதில்லை
மறந்திடாதீா் மறப்பதில்லை

Song Details

Movie Navarathri
Stars Sivaji Ganesan, Savithiri
Singers T.M. Soundararajan, P. Susheela, SC Krishnan
Lyrics Sankaradas Swamigal
Musician K.V. Mahadevan
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***