Monday, May 27, 2019

Yaraithan Nambuvatho Song Lyrics in Tamil

Yaraithan Nambuvatho Song Lyrics in Tamil

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

வேட்டை ஆடும் மானானேன் வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா மனிதர் இங்கே எவருண்டு

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்

Song Details

Movie Parakkum Paavai
Singer P.Suseela
Lyrics Kannadasan
Musician M.S.Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***