Friday, May 24, 2019
Ennai Maranthathen Thendrale Lyrics in Tamil
By
தமிழன்
@
5/24/2019
என்னை மறந்ததேன் தென்றலே பாடல் வாிகள்
என்னை மறந்ததேன் தென்றலே என்று நீ என்னிலை சொல்லிவா
என்னை மறந்ததேன் தென்றலே என்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் - மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ
என்னை மறந்ததேன் தென்றலே என்று நீ என்னிலை சொல்லிவா
கலையாத காதல் நிலையாகவென்று அழியாத சிலைகள் செய்தாயோ
கலையாத காதல் நிலையாகவென்று அழியாத சிலைகள் செய்தாயோ
ஒன்றும் அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டு திறவாமல் எங்கே சென்றாயோ
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீ ஆடும் நாளும் வருமோ
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீ ஆடும் நாளும் வருமோ - இந்த
நிலமாளும் மன்னன் நீயான போதும் நானாளும் சொந்தம் இல்லையோ
கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம் மலராக மாறாதோ
என்னை மறந்ததேன் தென்றலே என்று நீ என்னிலை சொல்லிவா
தொடராமல் தொடரும் சுவையான உறவில் வளராமல் வளா்ந்து நின்றாயே
இன்று முடியாமல் முடியும் பனி போன்ற கனவில் எனை வாழ வைத்து சென்றாயே
வந்தாடும் அலைகள் என்றும் என் காதல் பாடும் இல்லையோ
எந்நாளும் எனது நெஞ்சம் உனைத்தேடி வாராதோ
என்னை மறந்ததேன் தென்றலே என்று நீ என்னிலை சொல்லிவா
என்னை மறந்ததேன்...
Song Details |
|
---|---|
Movie | Kalangarai Vilakam |
Singer | P.Suseela |
Lyrics | Kannadasan |
Musician | M.S.Viswanathan |
Year | 1965 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***