Tuesday, August 6, 2019

Aaru Maname Aaru Song Lyrics in Tamil

Aaru Maname Aaru Song Lyrics in Tamil

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

Lyrics in English

Aaru maname aaru antha aandavan kattalai aaru
thaernthu manithan vaazhum vakaikku dheyvathin kattalai aaru

ondre solvaar ondre seyvaar ullathil ulladhu amaithi
inbathil thunbam thunbathil inbam iraivan vagutha niyathi
sollukku seygai ponnaagum varum thunbathil inbam pattagum
indha irandu kattalai arintha manathil ella nanmaiyum undaagum

unmaiyai solli nanmaiyai seythaal ulagam unnidam mayangum
nilai uyarum podhu panivu kondaal uyirgal unnai vanangum
unmai enbathu anbaagum perum panivu enbathu panpaagum
indha naangu kattalai arintha manathil ella nanmaiyum undaagum

aasai kobam kalavu kolbavan pesa therintha mirugam 
anbu nandri karunai kondavan manitha vadivil dheyvam
idhil mirugam enbathu kallamanam uyar dheyvam enbathu pillai manam
indha aaru kattalai arintha manathu aandavan vaazhum vellai manam

Song Details

Movie Aandavan Kattalai
Singer T.M.Soundarajan
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***