Friday, May 31, 2019

Irukkum Idathai Vittu Song Lyrics in Tamil

Irukkum Idathai Vittu Song Lyrics in Tamil

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையை தான் உரைப்பான்
ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே ஏஏஏ
உன்னையே நினைத்திருப்பான் உண்மையை தான் உரைப்பான்
ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக்கொல்வாய் அவனை ஞானத்தங்கமே ஏஏஏ
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக்கொல்வாய் அவனை ஞானத்தங்கமே
அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே ஏஏஏ
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே
அவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

Lyrics in English

irukkum idathai vittu illaadha idam thaedi
enggenggoa alaigindraar nyaana thangamae
avar aedhum ariyaaradi nyaana thangamae

unnaiyae ninaithiruppaan unmaiyaith thaan uraippaan
oorukkup pagaiyaavaan nyaana thangamae
avan oozhvinai enna solvaen nyaana thangamae

nanjjinai nenjjil vaithu naavinil anbu vaithu
nallavan poal nadippaan nyaana thangamae
avan naadagam enna solvaen nyaana thangamae

thonduk kendrae alaivaan kaelikku aalaavaan
kandu kolvaay avanai nyaana thangamae
avan kadavulil paadhiyadi nyaana thangamae

pillaiyaik killi vittu thottilai aattivittu
thalli nindrae sirippaan nyaana thangamae
avandhaan tharaniyaip padaithaanadi nyaana thangamae

Song Details

Movie Thiruvarutselvar
Singer Seerkazhi Govindarajan
Lyrics Kannadasan
Musician K.V.Mahadevan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***